ஆப்நகரம்

சத்தியமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தேர்தல் பணிகள் நெருங்குவதை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் என 100 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Samayam Tamil 11 Apr 2019, 9:16 am
சத்தியமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தேர்தல் பணிகள் நெருங்குவதை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
Samayam Tamil police564


முன்னதாக சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா பேருந்துநிலையம் முன்பு கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேருந்துநிலையம், எஸ்பிஎஸ் கார்னர், வட்டாட்சியர் அலுவலகம், ஆற்றுப்பாலம், அத்தாணி ரோடு வழியாக வடக்குப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.

இந்த ஊர்வலத்தில் சத்தியமங்கலம் உட்கோட்டத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் என 100 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி