ஆப்நகரம்

மதசார்ப்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்: பிரகாஷ் ராஜ் ட்வீட்

மதசார்ப்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 23 May 2019, 6:27 pm
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 345 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. ஏறக்குறைய அடுத்து மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி தான் அமையவுள்ளது.
Samayam Tamil தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ் ராஜ் உருக்கமான ட்வீட்
தேர்தல் முடிவுகள் குறித்து பிரகாஷ் ராஜ் உருக்கமான ட்வீட்


இந்நிலையில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பிறகு அரசியலில் களமிறங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இன்று வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கையில், அவர் போட்டியிட்ட மத்திய பெங்களூரு தொகுதி பிரகாஷ் ராஜ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும் இடம்பிடித்துள்ளனர்.

இன்னும் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்காமகவும் அதே சமயத்தில் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாகவும் அந்த பதிவு உள்ளது.


” என் முகத்தில் பளார் என்ற அறை விழுந்துள்ளது. இனி என்மேல் விமர்சனங்களும், கேலிப்பேச்சுக்களும் எழும். எனினும் என் நிலையில் இருந்து நான் மாறப்போவதில்லை. மதசார்ப்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். இந்த பயணம் மிகவும் கடுமையாக இருக்கப்போகிறது” என்ற பிரகாஷ் ராஜ் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி