ஆப்நகரம்

வரும் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரை களத்தில் பிரேமலதா விஜயகாந்த்

வரும் 27ம் தேதி திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

Samayam Tamil 23 Mar 2019, 3:51 pm
2019 மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் பொது விஜயகாந்த் தமிழகம் முழுவது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
Samayam Tamil திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரேமலதா


தற்போது விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இம்முறை பரப்புரையில் ஈடுபடுவரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.

வரும் 27ம் தேதி திருப்பூரில் பரப்புரை தொடங்கும் பிரேமலதா, ஏப். 16ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த செய்தி