ஆப்நகரம்

புல்வாமா தாக்குதலை நடத்தியவரே மோடி தான்: பரப்புரையில் பிரேமலதா உளறல்

கோவையில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், மோடி குறித்து தவறான கருத்தை தெரிவித்த நிலையில் அது மூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Samayam Tamil 29 Mar 2019, 11:32 am
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என பேசியது சமூகவலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

தேமுதி கட்சி, அதிமுக-பாஜக-பாமக கூட்டணி இணைந்து மக்களவை தேர்தலில் களம் காண்கிறது. அக்கட்சியின் துணை தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நேற்றிரவு கணபதி பேருந்து நிலையம் அருகே பிரேமலதா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், புல்வாமாக தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக, புல்வாமா தாக்குதலை நடத்தியவரே மோடி தான் என்று கூறினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. தலைவர்கள் தேர்தல் பரப்புரையின் போது கவனமாக பேச வேண்டும். உளறக் கூடாது என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா, அதிமுக தொகுதி 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும், கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மக்கள் முன்னிலையில் அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி