ஆப்நகரம்

பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத கட்சிக்கா உங்கள் ஓட்டு: பிரேமலதா கேள்வி?

பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத திமுக, காங்கிரஸ் கட்சியனருக்கா உங்கள் ஓட்டு? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2019, 3:27 pm
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத திமுக, காங்கிரஸ் கட்சியனருக்கா உங்கள் ஓட்டு? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத கட்சிக்கா உங்கள் ஓட்டு: பிரேமலதா கேள்வி?
பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத கட்சிக்கா உங்கள் ஓட்டு: பிரேமலதா கேள்வி?


வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த சோளிங்கரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெங்குபட்டு சம்பத் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஏ.கே.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்; கடவுள் இல்லை என்ற கொள்கையை கொண்ட திமுகவினருக்கு வாக்கினை அளித்துவிட்டு, பின்னர் குறைகளை கடவுளிடம் முறையிட்டால் அவர் கேட்கமாட்டார். ஆகவே கடவுள் நம்பிக்கை கொண்ட எங்களுக்கு வாக்களியுங்கள்.

பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத திமுக, காங்கிரஸ் கட்சியனருக்கா உங்கள் ஓட்டு? எனவே மோடிக்கு மீண்டும் வாக்களிங்கள். அதிமுக கூட்டணியினர் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் பெற்று தருவார்கள். தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், பிரதமரிடம் வலியுறுத்தி நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.

மேலும் துரைமுருகன் குறித்து பேசிய பிரேமலதா , அவரது நிலைப்பாடு மோசமாக உள்ளது. தற்போது நடைபெறும் வருமானவரி சோதனையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவருகிறது. தேமுதிகவை அலட்சியப்படுத்தியதே அவரது நிலைக்கு காரணம் என்றும் சாடினார்.

அடுத்த செய்தி