ஆப்நகரம்

மோடியை திருடன் என விமர்சித்த குழந்தைகள்; தடுத்த பிரியங்கா!

பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்து பள்ளி குழந்தைகள் கோஷமிடுவதை பிரியங்கா காந்தி நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரியங்கா காந்திக்கு கட்யினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அமேதி தொகுதி காங்., கட்சியின் கோட்டை என மீண்டும் நிரூபணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 1 May 2019, 7:09 pm
பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்து பள்ளி குழந்தைகள் கோஷமிடுவதை பிரியங்கா காந்தி நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Samayam Tamil priyanka


உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செல்லும் வழியில் கூடி இருந்த பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடியை விமர்சிக்க ராகுல் பயன்படுத்தி வரும் Chowkidar chor hai என்ற வாசகத்தை கோஷமிட்டனர்.

இதனை பார்த்து பிரியங்கா காந்தி குழந்தைகளிடம், அவ்வாறு கோஷமிடுவது சரியல்ல என்றும் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர் அந்த குழந்தைகள் ராகுல் காந்தியை புகழும் விதமாக கோஷமிட தொடங்கினர். பிரியங்கா காந்தியின் செயலை பாராட்டி சிலரும், குழந்தைகளை அவ்வாறு கேஷாமிட வைத்ததை எதிர்த்து சிலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

பிரியங்கா காந்திக்கு கட்யினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அமேதி தொகுதி காங்., கட்சியின் கோட்டை என மீண்டும் நிரூபணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி