ஆப்நகரம்

Tricolour Post: இந்திய கொடி எப்படி இருக்கும்னு கூடவா தெரியாது?.. சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களித்த பின் பதிவிட்ட டுவிட்டில் இந்திய கொடிக்கும் பதிலாக பராகுவே நாட்டு கொடியை போட்டு பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 13 May 2019, 3:32 pm
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களித்த பின் பதிவிட்ட டுவிட்டில் இந்திய கொடிக்கும் பதிலாக பராகுவே நாட்டு கொடியை போட்டு பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Robert Vadra


நேற்று 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பிஹாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, உத்தரபிரதேசம் 14, மேற்குவங்காளம் 8, டெல்லியில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தான் வாக்களித்த மை வைக்கப்பட்ட விரலை காடியபடிய படி, அனைவரும் வாக்களித்து தேசத்தை காக்க வேண்டும் என டுவிட் செய்தார்.



அந்த டுவிட்டில் இந்திய கொடிக்கு பதிலாக பராகுவே கொடியை வைத்து டுவிட் செய்துள்ளார். இந்த தவறைப் பார்த்த சிலர், ராபர்ட் வதேராவுக்கு இந்திய கொடி கூட எப்படி இருக்கும் என தெரியாது போல என பலரும் கிண்டலாக டுவிட் செய்தனர்.

இதையடுத்து தனது தவறை உணர்ந்த ராபர்ட் வதோரா, “இந்தியா என் இதயத்தில் இருக்கிறது. தவறுதலாக ப்ராகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது தவறு. இது உங்கள் அனைவருக்கும் புரியும். என்னை கிண்டல் செய்பவர்களை நான் பொருட்படுத்தப்போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி