ஆப்நகரம்

தேர்தல் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இன்றும் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 17 Apr 2019, 7:27 am
தொடர் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Samayam Tamil traffic crowd


வாக்குப்பதிவையையொட்டி வியாழக்கிழமையும், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு நேரத்திலும் தொடர்ந்த போக்குவரத்து நெரிசலாலும், பல மணி நேரம் பேருந்து கிடைக்காமலும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இன்றும் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி