ஆப்நகரம்

செல்பி, நடை பயணம், திண்ணை பிரசாரம்: வாக்காளர்களை கவரும் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், கைக்குலுக்கியும் மகிழ்ந்தனர்.

Samayam Tamil 28 Jul 2019, 2:41 pm
வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டும், திண்ணை பிரசாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்.
Samayam Tamil WhatsApp Image 2019-07-28 at 12.10.51 PM.


வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக கட்சியின் வேட்பாளர் துரை ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இன்று, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெக்குப்பட்டு கிராமத்தில் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார். மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் முறையிட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர்.


இதைத்தொடர்ந்து ராமநாயக்கன் பட்டியில் கிராம மக்களை சந்தித்து ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். இதன்பின்னர் திம்மாம்பேட்டை செல்லும் வழியில் சாலையின் இருபுறங்களிலும் மக்களை சந்தித்துப்பேசினார். மேலும் திம்மாம்பேட்டை - ஆவாரங்குப்பம் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டி முடிக்காததால் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தரைப்பாலத்தை கட்டிமுடிக்க திமுக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.


திம்மாம்பேட்டையில் திண்ணை பிரசாரம் முடிந்ததும் நடைபயணமாகச்சென்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்போது, ஸ்டாலினுடன் கை குலுக்கி, புகைப்படம் எடுத்து மக்கள் மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி