ஆப்நகரம்

தமிழ்நாடு மாநிலத்தின் புதிய தேர்தல் ஆணையராக இரா. பழனிசாமி பொறுப்பேற்பு

அண்மையில் தேர்தல் ஆணையராக இருந்த மாலிக் ஃபெரோஸ்கான் ஓய்வு பெற்றத்தை தொடர்ந்து தமிழக மாநிலத்திற்கான புதிய தேர்தல் ஆணையராக இரா. பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 10 Apr 2019, 8:00 pm
கடந்த 2017ம் ஆண்டில் தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், பல்வேறு அரசுத் துறைகளில் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார்.
Samayam Tamil தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இரா. பழனிசாமி பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இரா. பழனிசாமி பொறுப்பேற்பு


கடந்த 2014ம் ஆண்டு தனது 60 வயது ஃபெரோஸ்கான் ஓய்வு பெற்றார். எனினும், 2017ம் ஆண்டில் அவருடைய 63வது வயதில் மாலிக் ஃபெரோஸ்கான் மீண்டும் தமிழகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தேர்தல் ஆணையத்தில் தரப்பிலிருந்து அவர் பதில்களை வழங்கி வந்தார். இரண்டு ஆண்டுகாக இந்த பொறுப்பில் மாலிக் ஃபெரோஸ்கான் தன்னுடைய 65வது வயதில் ஓய்வி பெற்றார்.

அதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட இரா. பழனிசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி