ஆப்நகரம்

பாதுகாப்பு வளையத்தை மீறிய ராகுல்; முண்டி அடித்து ஓடிவந்து, மூச்சுத் திணற வைத்த தொண்டர்கள்!

தான் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாதுகாப்பு வளையத்தை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயல்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2019, 8:21 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil Rahul Gandhi inTelangana


அனைத்துக் கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் மே 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மக்களவை தேர்தலை ஒட்டி, பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் ஹுசுர்நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். இந்த சூழலில் தனது பாதுகாப்பு வளையத்தையும் மீறி, மக்களுக்கு ராகுல்காந்தி கைகுலுக்கினார்.

இதைக் கண்ட பலரும் முண்டி அடித்துக் கொண்டு, மூச்சுத் திணறும் படி ஓடி வந்தனர். பின்னர் பாதுகாவலர்கள் ராகுல் காந்தியை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

அப்போது பொதுமக்கள் மீது எந்தவித தடியடியும் நடத்த வேண்டாம் என்று போலீசாருக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி