ஆப்நகரம்

என் மனதில் இருந்து பேச நான் விரும்பவில்லை - வயநாட்டில் மோடியை கிண்டலடித்த ராகுல்

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் தரிசனம் செய்தார். என் மனதில் இருந்து பேச நான் விரும்பவில்லை. உங்கள் கருத்தை கேட்கவே விரும்புகிறேன் என்றார் ராகுல்.

Samayam Tamil 17 Apr 2019, 12:58 pm
ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் தரிசனம் செய்தார். கேரள கோவில்களின் பாரம்பரிய வழக்கம் மற்றும் விதிகளின்படி வேட்டியும், மேல் துண்டும் அணிந்து தரிசனம் செய்த அவர் கோவில் விழுந்து வணங்கினார்.
Samayam Tamil rahul-gandhi-1442


மறைந்த தனது தந்தை ராஜீவ் காந்திக்கான சடங்குகளையும் ராகுல் காந்தி மேற்கொண்டார்.

’கேரளாவின் வயநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நீங்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனாலேயே உங்கள் மண்ணில் போட்டியிடுவதில் பெருமை அடைகிறேன். உங்கள் சகோதரனாக நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் மனதில் உள்ளதை அறியவே நான் வந்துள்ளேன்.

உங்களிடம் பேச கதைகளும் சரித்திரங்களும் தேவையில்லை. உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வந்துள்ளேன். பிரச்னைகளுக்குத் தீர்வு உங்கள் இடத்தில் இருந்தே வரும் என நம்புபவன் நான். நான் ஓர் அரசியல்வாதியாக எதையும் உங்கள் மீது திணிக்கவில்லை.

என் மனதில் இருந்து பேச நான் விரும்பவில்லை. உங்கள் கருத்தை கேட்கவே விரும்புகிறேன் என்றார் ராகுல்.

அடுத்த செய்தி