ஆப்நகரம்

”ராகுல் காந்தி சிறு குழந்தைபோல...” - மம்தா கிண்டல்

ராகுல் காந்தி சிறு குழந்தை, மனதில் நினைப்பதை பேசுகிறார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Mar 2019, 7:02 pm
ராகுல் காந்தி சிறு குழந்தை, மனதில் நினைப்பதை பேசுகிறார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mamtha banerjee2


42 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 4 கட்சிகளும் தனித்தனியாக போட்யிடுகின்றன. அண்மையில் அந்த மாநிலத்தின் மால்டா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர் சிறு குழந்தை என்பதைத் தவிர, வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் எனக் கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் மம்தா காங்., கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என கூறப்படும் நிலையில் மம்தா, ராகுல் ஆகிய இருவரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்ற கவுண்டமணி டயலாக் போல தேர்தலுக்கு முன்னர் அரசியல்வாதிகள் பேசும் பேச்சு, விமர்சனம் ஆகியவை கூட்டணி ஆட்சி பேச்சுவார்த்தையின்போது காற்றில் கரைந்து காணாமல் போகும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி