ஆப்நகரம்

Vijay: ஆந்திர அரசியல் ரஜினிக்கும், விஜய்க்கு சரியான அரசியல் பாடம்?... தப்பிப்பார்களா?

தமிழக அரசியலில் திரைத்துறையினரின் பங்கு அதிகம். அதிலும் குறிப்பாக நடிகர்கள் பெரிய அளவில் முத்திரைப் பதித்துள்ளனர். அது ஜெயலலிதா, கருணநிதியின் மறைவுக்கு பின்னர் அதைவிட அதிகமாக மாறி உள்ளது.

Samayam Tamil 25 May 2019, 1:10 pm
தமிழக அரசியலில் திரைத்துறையினரின் பங்கு அதிகம். அதிலும் குறிப்பாக நடிகர்கள் பெரிய அளவில் முத்திரைப் பதித்துள்ளனர். அது ஜெயலலிதா, கருணநிதியின் மறைவுக்கு பின்னர் அதைவிட அதிகமாக மாறி உள்ளது.
Samayam Tamil Rajini Vijay


ஜொலிக்கவில்லை:
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை இருந்த போது நடிகர்கள் அரசியலுக்கு வர தயங்கியதும், அப்படியே வந்தாலும் பெரியளவில் ஜொலிக்காமல் இருப்பதும், அல்லது நேரடியாக திமுக அல்லது அதிமுகவில் இணைவதுமாக இருந்ததால் இந்த இரு கட்சிகளைத் தவிர பெரிய தலைமையாக உருவெடுக்க மற்ற கட்சிகளாலும், நடிகர்களாகும் முடியவில்லை.
அதனால் கமல், ரஜினி ஆகியோர் அப்போது வரவில்லை என்றே கூறலாம். தற்போது நேரடி அரசியலில் இறங்கி தேர்தல் களம் கண்டு அசத்தி உள்ளது கமலின் மக்கள் நீதி மய்யம்.

மறு புறம் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், விஜய் அரசியல் வசனங்கள் தெறிக்க விடுவதும், அவரது தந்தை சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது குறித்து அடிக்கடி பேசி வருவதுமாக உள்ளார்.

ரஜினி, விஜய் அரசியல் கனவு ஆந்திர அரசியல் போல ஆகுமா?
ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார் சிரஞ்சீவி. இவரின் தம்பி பவன் கல்யானும் பிரபல நடிகராக ஜொலித்து வருகின்றார்.

பிரஜா ராஜ்யம் கட்சி:
2008ம் ஆண்டு சிரஞ்சீவியால் தொடங்கப்பட்டது பிரஜா ராஜ்யம் கட்சி. ஆந்திராவில் தனி ஆளாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் சிரஞ்சீவி களமிறங்கினார். அண்ணனின் பிரஜா ராஜ்யம் கட்சியில் தம்பி பவன் கல்யாண் கடுமையாக உழைத்தார்.



இருப்பினும் சிரஞ்சீவியால் ஜொலிக்க முடியாமல் பெரிய தோல்வியை கண்டார்.
இதையடுத்து அவரின் பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் சேர்த்தார்.

ஜன சேனா கட்சி:

காங்கிரஸுடன் சேர விரும்பாத பவன் கல்யாண், அண்ணன் சிரஞ்சீவியிடமிருந்து பிரிந்து ஜன சேனா கட்சியை 2014ல் தொடங்கினார்.

பவன் கல்யாண் போட்ம் பொதுக் கூட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்பரித்தனர். இதனால் அரயலில் பெரிய இடத்தைப் பிடிக்கலாம் என பவன் கல்யாண் எண்ணினார்.



இருப்பினும் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் (பீமாவரம் தொகுதி, காஜுவாகா தொகுதி) பவன் கல்யாண் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
அவரின் கட்சியில் ராஜோலு தொகுதியில் போட்டியிட்ட வரபிரசாத் ராவ் என்பவர் வெற்றி பெற்றார்.



ரஜினி, விஜய்க்கு வாய்ப்பு எப்படி?
கமல் ஒருவழியாக நேரடி அரசியலில் நுழைந்துள்ள நிலையில், ரஜினி வந்தால் தமிழகத்தில் பெரிய தாக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் தமிழகத்தில் பாஜக மீது மக்கள் அந்தளவிற்கு நம்பகத்தன்மை இல்லாததால், அவர் பாஜகவில் சேருவதாக அடிபடும் பேச்சு உண்மையாகும் பட்சத்தில் அவருக்கு வாக்களிப்பதில் அவரது ரசிகர்களே தயங்குவார்கள் என தெரிகிறது.



அதே போல் மெர்சல் பட வசன பிரச்னையை தொடர்ந்து விஜய்யை நேரடியாக பாஜக விமர்சித்துள்ளது. விஜய் ஒருவேளை அரசியலுக்கு வரும் பட்சத்தில் கமலைப் போல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


ஆனால் அவர் இப்போதைக்கு வருவாரா என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் சிரஞ்சீவி, பவன் கல்யாண் கதை ரஜினி, விஜய்க்கு வந்துவிடக்கூடாது என நம்பலாம்.

அடுத்த செய்தி