ஆப்நகரம்

ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். பிற்பகல் 3 மணிக்கு பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.

Samayam Tamil 6 Apr 2019, 2:31 pm
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
Samayam Tamil Rajnath-Singh-3-


தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக சந்திக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறயுள்ள சூழலில், தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.தமிழகத்திலுள்ள மேலும் பல கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்காக நாளை தமிழகம் வரும் ராஜ்நாத் சிங் பெரம்பலூர் மற்றும் மதுரை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

மேலும் நாளை பிற்பகல் 3 மணிக்கு பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மதுரைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை செய்யவுள்ளார்.

அடுத்த செய்தி