ஆப்நகரம்

'பரிசுப் பெட்டி’ சின்னம் தேர்வு செய்ததன் பின்னணி என்ன? டிடிவி தினகரன் சென்டிமெண்ட் விளக்கம்!

வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து, முக்கிய தகவலை டிடிவி தினகரன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2019, 2:35 pm
விரைவில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு “பரிசுப் பெட்டி” சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil TTV Dinakaran


இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மாபெரும் சட்டப் போராட்டத்திற்கு பின், தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

முதலில் 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் எங்களுக்கு அனுப்பி இருந்தது. அதில் இருந்த பரிசுப் பெட்டியை பார்த்த போது, கடந்த 2016ல் ஜெயலலிதா அறிமுகம் செய்த பரிசுப் பொருட்கள் அடங்கிய தாய்-சேய் நலத்திட்டம் நினைவுக்கு வந்தது.

எனவே சென்டிமெண்ட் காரணமாக, ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்வு செய்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உடனடியாக சின்னம் வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் நன்றி.

சோதனை என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். இதுபோன்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறினார்.

அடுத்த செய்தி