ஆப்நகரம்

தேனி தொகுதியில் நான் தோற்றதற்கு இதுதான் காரணம்; விடமாட்டேன் - ஈவிகேஎஸ் அடுத்த அதிரடி!

தேனி மக்களவை தொகுதியில் தோற்றதற்கு இதுதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 May 2019, 1:06 pm
சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேனி தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளன.
Samayam Tamil EVKS


பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரன்களில் ’சீல்’ இல்லை. கேட்டால் ‘அரக்கு’ கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி தொகுதியில் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று வழக்குத் தொடர உள்ளேன்.

இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பண பலம், அதிகார பலம் காரணமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது.

அதுபோல் வட மாநிலங்களில் அமையவில்லை. இதுவே அங்கு காங்கிரஸ் தோல்விக்கு காரணம். காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழுவை ராகுல் காந்தி அமைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மீது ஏன் என்று தெரியவில்லை எனக் கூறினார்.

அடுத்த செய்தி