ஆப்நகரம்

Supreme Court: வாக்கு இயந்திர முறைகேட்டைத் தடுக்கும் VVPAT

உச்சநீதிமன்றம் திங்கள் அன்று ஒரு மக்களவைத் தொகுதி பூத்தில் குறைந்த பட்சம் ஐந்து வாக்கு இயந்திரங்களின் தாள்களை சோதனையிட வேண்டும் என உத்தவிட்டது. இதற்குப் பெயர் வோட்டர்ஸ் வெரிஃபைடு பேப்பர் ஆடிட்.

Samayam Tamil 8 Apr 2019, 1:50 pm
உச்சநீதிமன்றம் திங்கள் அன்று ஒரு மக்களவைத் தொகுதி பூத்தில் குறைந்த பட்சம் ஐந்து வாக்கு இயந்திரங்களின் தாள்களை சோதனையிட வேண்டும் என உத்தவிட்டது. இதற்குப் பெயர் வோட்டர்ஸ் வெரிஃபைடு பேப்பர் ஆடிட்.
Samayam Tamil election 2


இதற்கு முன்னர் ஒரு தொகுதியில் ஒரு இயந்திரத்தை மட்டும் சோதனை செய்தால் போதுமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குறைந்தது ஐந்து இயந்திரங்களாவது சோதனையிடப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் மேல் முறையீடு செய்தன.

தெலுங்கு தேசம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள்
இந்த வழக்கை தொடர்ந்தன. இதனை விசாரித்த தலைமை நீதிமதி ரஞ்சன் கோகாய் இத்தீர்ப்பை வழங்கினார். இதனால் தேர்தல் முறைகேடுகள் தடுக்கப்படும் என எதிர்கட்சிகள் நம்புகின்றன. பாஜக வாக்கு இயந்திர முறைகேடு செய்வதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி