ஆப்நகரம்

துலாபாரம் அறுந்து விழுந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சசி தரூர்

துலாபார வேண்டுதலின் போது முன்னாள் அமைச்சர் சசி தரூர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். தற்போது மருத்துவமனியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 15 Apr 2019, 5:06 pm
கேரளாவில் எடைக்கு எடை வாழைப் பழம் வழங்கும் வேண்டுதலின் போது துலாபாரம் அறுந்து விழுந்த விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
Samayam Tamil துலாபாரம் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த சசி தரூர்
துலாபாரம் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த சசி தரூர்


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், அங்குள்ள தம்பானூர் கந்தாரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது அவர் எடைக்கு எடை வாழைப் பழம் கொடுத்தார்.

துலாபாரத்தில் தராசின் ஒரு பக்கத்தில் சசி தரூர் அமர, அவரது எடைக்கு ஏற்றவாறு வாழைப்பழங்கள் மறுப்பக்கத்தில் வைக்கப்பட்டன. அப்போது எடையின் அதிகரிப்பால் துலாபாரத்தில் அவர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்தது.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ரத்தல் கொட்டியது. சசி தரூக்கு காலிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சசி தரூரின் தலையில் அறு தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், சசி தரூர் நினைக்கும் நேரத்தில் வீடு திரும்பலாம் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி