ஆப்நகரம்

தலைமைத் தேர்தல் அதிகாரிமீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினரை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், அதற்கெல்லாம் அஞ்சப்போவது இல்லை என்றார்.

Samayam Tamil 15 Apr 2019, 9:22 am
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil mk-stalin


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதுபேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார்.

அதிகாரிகளை மாற்றக் கோரியும் மாற்றவில்லை என்று கூறிய ஸ்டாலின், தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.

முன்னதாக வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். திமுகவினரை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், அதற்கெல்லாம் அஞ்சப்போவது இல்லை என்றார்.

அடுத்த செய்தி