ஆப்நகரம்

புகார் பெட்டியாக மாறிவிட்டார் ஸ்டாலின் - பிரேமலதா விஜயகாந்த்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து நத்தம் காந்தி கலையரங்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார். திமுக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருகிறார் என்றார்.

Samayam Tamil 6 Apr 2019, 10:13 am
திமுக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருகிறார். இதனால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்பார். ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது என நத்தத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்.
Samayam Tamil Premalatha_EPS


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து நத்தம் காந்தி கலையரங்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதாவது, ’திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமானது மாம்பழம். இந்த மாம்பழத்தை நீங்கள் வெற்றியடைய செய்ய வேண்டும். தமிழகத்தில் அமைந்துள்ளது சாதாரண கூட்டணி அல்ல.

மக்கள் ஆதரவுடன் அமைந்த மெகா கூட்டணி. போகும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். இதுவே நமது வெற்றியின் அறிகுறி. முதலமைச்சர், துணை முதலமைச்சர், கேப்டன், அய்யா மற்றும் கூட்டணி தலைவர்களால் உறுதி செய்யப்பட்டது இந்த மெகா கூட்டணி. முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இந்த மாங்கனி சிறப்பு வாய்ந்தது. வெற்றி என்பது உங்கள் கைகளில் அமைந்திருக்கிறது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்பார். ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.
திமுக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருகிறார். இதனால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார். தேமுதிக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றி பெறும்’ என்று பேசினார்.


இந்த பிரச்சார கூட்டத்தின்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி