ஆப்நகரம்

ஜெ., பெயரை கூறி வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின் - ஜெயகுமார்

தன் தந்தையின் பெயரை கூறாமல் ஜெயலலிதா பெயரை கூறி வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின் நிலையற்ற மனநிலையில் உள்ளார் என ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 9:53 pm
தன் தந்தையின் பெயரை கூறாமல் ஜெயலலிதா பெயரை கூறி வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின் நிலையற்ற மனநிலையில் உள்ளார் என ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil jeyakumar minister


தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மணி ஆகியோரை ஆதரித்து, ஒடசல்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், ’சிபிஐ மூலம் அச்சுறுத்தி, அதிமுக-வுடன் பாஜக கூட்டணி வைத்துள்து. வன்னியர் சமூக மக்களுக்காக திமுக பாடுபடுவதை ராமதாஸ் மற்றும் அன்புமணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெட்ரோல் குண்டு வீசுவதிலும், வன்முறையை தூண்டுவதிலும் சோர்வு அடையாத கட்சி பாமக என கூறியவர் ஜெயலலிதா. அத்தகைய அதிமுகவுடன் இன்று அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள்’ என்று கூறினார்.

பிரதமர் மோடியின் சவுகிதார் பட்டம் குறித்து விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் ஊழலை பாதுகாக்கும் காவலாளி சவுகிதார் மோடி. ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளதில் இருந்தே, மருத்துவமனையில் ஜெயலலிதா போட்ட கையெழுத்து போலி என தெரியவந்துள்ளது. இதன்மூலம் அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு நாடகம் அரங்கேறி இருக்கிறது என்று பேசினார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, அதில் தொடர்புடைய அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்நிலையில் தன் தந்தையின் பெயரை கூறாமல் ஜெயலலிதா பெயரை கூறி வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின் நிலையற்ற மனநிலையில் உள்ளார் என ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

அடுத்த செய்தி