ஆப்நகரம்

மே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) நடைபெற உள்ளது. அன்று அனைத்து மதுக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 21 May 2019, 10:43 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் மே 23ஆம் தேதி மதுக்கடைகளையும் மூட உத்தரவு.
  • புதுச்சேரியில் மே 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மதுக்கடைகள் திறக்காது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 124289-tasmac
தமிழகம் மற்றும் புதுவையில் மே 23ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) நடைபெற உள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கும் வாக்கு எண்ணும் மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மே 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் ஆணையிட்டுள்ளார்.

அடுத்த செய்தி