ஆப்நகரம்

Tamil Nadu By Elections Live: சென்னையில் 2000 ஏக்கரில் உணவுப் பூங்கா - வேதாரண்யம் பிரச்சாரத்தில் முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து உடனுக்குடன் தகவல்களை இங்கே படிக்கலாம்.

Samayam Tamil 31 Mar 2019, 2:48 pm

ஹைலைட்ஸ்:

  • விரைவில் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல்
  • பல்வேறு அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Elections
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
அதேநாளில் தமிழகத்தில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4, தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் வேட்புமனு தாக்கலும் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து உரிய விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

* புத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு!
- மிஷன் சக்தி விவகாரத்தில் பாஜக அரசு மீது, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குறிப்பாக தேர்தல் நேரத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோற்றுவிடுவோம் என்ற பயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* திமுகவின் “ப்ளூ ஸ்கை ஆபரேஷன்” என்றால் என்ன? விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்!
- வரும் தேர்தலை ஒட்டி, திமுக புதுவிதமான யுக்தியை கையாண்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி, அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

* இத்தனை கோடியா - அத்தனையும் தங்க நகைகளாம்; அப்படியே அள்ளிச் சென்ற தேர்தல் அதிகாரிகள்!
- பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். விருதுநகர் அருகே சிவகாசி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது நடவடிக்கை.

* சென்னையில் 2,000 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை - நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணனை ஆதரித்து வேதாரண்யத்தில் பிரச்சாரம் செய்த போது முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

* வரும் தேர்தலில் அமேதியைத் தொடர்ந்து, கேரளாவிலும் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி!
- வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனி, இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

* ரெய்டு மூலம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கும் வஞ்சக திட்டம் நிறைவேறாது - வைகோ கடும் கண்டனம்!

* திருப்பூரில் பாஜகவினர் உற்சாகம் - வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு!
- பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* திண்டிவனத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆரணி மக்களவை தொகுதி வேட்பாளர் ஷாஜி, விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் அன்பில் பொய்யாமொழி ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அடுத்த செய்தி