ஆப்நகரம்

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர்- வைகோ

தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் என்பதை இந்திய அரசியல் அரங்கத்திற்கு தமிழக மக்கள் பறைசாற்றியுள்ளனர். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என வைகோ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 May 2019, 5:11 pm
பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் பாஜக சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்தியா முழுக்க உள்ள பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil vaiko


தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் பாஜகவால் தமிழகத்தில் ஒரு மக்களவைத் தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் தமிழகத்தில் பாஜகவின் மதவாத அரசியல் காலூன்றுவது நடக்காத செயல் என தமிழ் தேசிய மற்றும் திராவிட கட்சி விமர்சித்து வருகின்றன.

இதனையடுத்து தற்போது, தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி திராவிட இயக்க பூமி தமிழகம் என்பதை இந்திய அரசியல் அரங்கத்திற்கு தமிழக மக்கள் பறைசாற்றியுள்ளனர். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என வைகோ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி