ஆப்நகரம்

இவங்க மட்டும் நோட்டாவை விட அதிக ஓட்டு வாங்கணும் - நடிகை குஷ்பு ஆசை!

தமிழக பாஜக தலைவர் நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 May 2019, 8:22 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை 5ஆம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களின் 51 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.
Samayam Tamil Khusbhu


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் மோடி மீது வெறுப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. தோல்வி பயம் காரணமாக மோடி கீழ்த்தரமான வார்த்தைகளை பிரச்சாரத்தின் போது பயன்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவின் போது, பாஜக வெற்றி பெறாது. கடலில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறியுள்ளார். ஆனால் கடல் நீரில் தாமரை மலராது என்று அவருக்கு தெரியவில்லை போலும்.

அதற்கு காரணம், தெர்மாகோல் விஞ்ஞானிகள் இருக்கும் அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பது தான். தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவர் பெண் என்பதால் நோட்டாவை விட கூடுதலான ஓட்டுகள் பெற வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் எங்கள் கூட்டணி 36 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி