ஆப்நகரம்

தமிழக தேர்தல் சட்டம், ஒழுங்கு பிரச்னையின்றி நிறைவுற்றது - தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தல் எந்தவித பிரச்னையும் இன்றி நடந்து முடிந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Apr 2019, 9:21 pm
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 6 மணி நிலவரப்படி, தமிழக மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளது.
Samayam Tamil satyabrata-sahoo


இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 70 முதல் 72% வரை வாக்குப்பதிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சில இடங்களில் வேட்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சட்டம், ஒழுங்கு பிரச்னை எதுவும் இன்றி தேர்தல் நிறைவு பெற்றுள்ளது என்று கூறினார்.

அடுத்த செய்தி