ஆப்நகரம்

மக்களிடம் கைத்தட்டலை கேட்டு வாங்கிய தம்பிதுரை- கரூரில் கூட்டத்தில் சிரிப்பலை

கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தம்பிதுரை பொதுமக்களிடம் கைத்தட்டலை கேட்டு வாங்கியதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

Samayam Tamil 28 Mar 2019, 10:57 am
கரூரில் தீவிர பிரப்புரையில் ஈடுபட்டு வரும் மக்களவையின் துணை சபாநாயகர் நேற்றைய கூட்டத்தில் பேசும் போது மக்களிடம் கைத்தட்டலை கேட்டு வாங்க சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.
Samayam Tamil மக்களிடம் கைத்தட்டலை கேட்டு வாங்கி அதிமுக தம்பிதுரை


மக்களவை துணை சபாநாயகர், மீண்டும் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். அவருக்கு எதிராக காங்கிரஸின் ஜோதிமணி போட்டியிடுகிறார். இதனால் தமிழகத்தில் அனைவரும் உற்றுநோக்கும் தொகுதியாக கரூர் மாறியுள்ளது.

நேற்று கரூரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தம்பிதுரையிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. மக்கள் மத்தியில் நடைபெற்ற அந்த நேர்காணலில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாத்தி கொடுத்திருக்கிறோம், இதையெல்லாம் செஞ்சது யாரு?, நான்தானே சொல்லுங்கம்மா என்று தம்பிதுரை கூறினார்.

அதற்கு மக்கள் அமைதியாக இருந்தனர். இதனால் உடனே அவர் எல்லோரும் கைத்தட்டுங்க என ஆணையிடும் தோணியில் பேசினார். இது கூட்டத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தினாலும், மக்களும் அவருக்கு கைத்தட்டல் கொடுத்தனர்.

பிறகு தம்பிதுரையும் சிரித்துவிட்டு பேட்டியை தொடர்ந்தார். எனினும், இந்த செய்தி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு கமெண்ட் பாக்ஸில் ”கைதட்டலை கூட கேட்டு வாங்கும் தம்பிதுரை” என பலரும் குறிப்பிட்டு உள்ளனர்.

அடுத்த செய்தி