ஆப்நகரம்

இப்படியொரு கோர விபத்தா? அதிமுக பிரச்சார கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சோகம்!

மினி டிரக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 7:14 pm
நாகை மாவட்டம் மங்கைநல்லூரியில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Accident


இந்நிலையில் கூட்டம் முடிந்ததும், அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் 20 பேர் மினி டிரக் ஒன்றில் பயணித்தனர். அப்போது மயிலாடுதுறை அருகே ஆனந்தநல்லூர் பகுதியில் மினி டிரக் வந்தபோது நிலை தடுமாறியது.

இதனால் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் மூவர் பலியாகினர். அவர்கள் கந்தமங்கலத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(50), தனபால்(60), வினாயகராஜா(40) ஆகியோர் ஆவர்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனே மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்வதற்கு யார், மினிடிரக் ஏற்பாடு செய்தது என்று தெரியவில்லை.

அடுத்த செய்தி