ஆப்நகரம்

#TimesMegaPoll: மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கப் போகும் வேலைவாய்ப்பின்மை!

புதுடெல்லி: வரும் மக்களவை தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக வாக்காளர்கள் முன்பு எழும் விஷயங்கள் குறித்து டைம்ஸ் குரூப் நடத்திய மெகா ஆன்லைன் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகியுள்ளன.

TIMESOFINDIA.COM 21 Feb 2019, 12:36 pm
டைம்ஸ் குரூப் தனது 13 மீடியா பிராபர்டி மூலம் 9 மொழிகளில், கடந்த 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பிரம்மாண்ட வாக்குப்பதிவை நடத்தியது. 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் பதிவாகின. இருப்பினும் முறையாக லாகின் செய்யப்பட்டு பதிவான 2 லட்சத்திற்கான மேலான வாக்குகள் மட்டுமே கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
Samayam Tamil Modi vs Rahul.


ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்கிற முறையில் மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டது. இந்த வாக்குப்பதிவில் எந்தவித தலையீடும் இன்றி, முழுவதும் வாக்காளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அப்படியே முடிவுகளை வெளியிடுகிறோம். ஆன்லைன் மூலம் பதிவான வாக்குகள் மூலம் முடிவுகள் தெரியவந்துள்ளன.

Also Read This: Times Mega Online Poll: பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்!!

Also Read This:Times Mega Online poll: மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கப் போகும் வேலைவாய்ப்பின்மை!

Also Read This:Times Mega Online Poll: ராகுல் காந்திக்கு ஆதரவு கூடியிருக்கிறதா?

டைம்ஸ் குரூப் மெகா ஆன்லைன் வாக்குப்பதிவின் மூலம் வாக்காளர்களிடம் மிக முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து நிற்பது வேலைவாய்ப்பின்மை. இதுதொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளில் 40.21% வாக்குகள் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு கிடைத்துள்ளன.

இதற்கடுத்த இடத்தில் 21.82% வாக்குகள் உடன் விவசாயிகள் பிரச்சனை உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது, மோடி அரசை வரும் தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

இதேபோல் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, மோடி அரசின் மிகப்பெரிய தோல்வியாக வேலைவாய்ப்பின்மையை வாக்காளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது போதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லை என்று 29.52% பேர் வாக்களித்துள்ளனர்.

அதேசமயம் 35.72% வாக்குகளுடன் ராமர் கோவில் பிரச்சனை முதலிடத்தில் உள்ளது. ராமர் கோவில் விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று வாக்காளர்கள் கருதுகின்றனர். இந்த பிரச்சனை மக்களவை தேர்தலில் முக்கியமான ஒன்றாக பிரதிபலிக்கும் என்று 10.16% வாக்காளர்கள் கருதுகின்றனர்.

வரும் மக்களவை தேர்தலில் ரபேல் போர் விமான பிரச்சனை, பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று வெறும் 17.51% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இந்த விவகாரம் பாஜகவிற்கு எந்தவித எதிர்மறையான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று 74.59% பேர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 7.9% பேர் ரபேல் விவகாரத்தின் விளைவுகளை தீர்மானிக்க இயலாது என்று வாக்களித்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்