ஆப்நகரம்

திமுகவின் “ப்ளூ ஸ்கை ஆபரேஷன்” என்றால் என்ன? விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்!

வரும் தேர்தலை ஒட்டி, திமுக புதுவிதமான யுக்தியை கையாண்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி, அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2019, 8:43 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், நேற்று திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.
Samayam Tamil Minister-jayakumar


அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி, பண்ணை வீடு உள்ளிட்டவற்றிலும் தீவிர சோதனை நடைபெற்றது.

இதேபோல் வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ் வீட்டிலும் 2 மணி நேரம் சோதனை செய்தனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் நீடித்த சோதனையின் இறுதியில், அனைத்தும் சரியாக உள்ளதாக அதிகாரிகள் எழுதி கொடுத்து விட்டுச் சென்றதாக துரைமுருகன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், “ப்ளூ ஸ்கை ஆபரேஷன்” என்ற பெயரில் திமுக புதிய யுக்தி உருவாக்கியுள்ளது. இதன்மூலம் தொகுதி ஒன்றிற்கு ரூ.100 கோடி வீதம், 20 தொகுதிகளுக்கு ரூ.2,000 கோடி செலவிட திமுக திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பேரிலேயே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி