ஆப்நகரம்

தேர்தல் நாளில் சென்னையில் இப்படியா? ஏன் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன தெரியுமா!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்றைய தினம், சென்னையில் மிகக் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2019, 8:25 pm
தமிழகத்தில் இன்று மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் சென்னையில் மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டுள்ளன. இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் கேப்கள், பயணிகளிடம் விலையை உயர்த்தி வசூல் வேட்டையை ஈடுபட்டன.
Samayam Tamil Chennai Bus Services


அதிகாரப்பூர்வ தகவலின்படி, சென்னையில் 3,100 மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. அதாவது பொது விடுமுறை நாட்களில் 70 - 80% பேருந்துகளே இயக்கப்படுகின்றன. ஆனால் அதைவிட குறைவான பேருந்துகளே இன்றைய தினம் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதல் காரணம், 200 மாநகரப் பேருந்துகள் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு நேற்று இரவு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது காரணம், ஏராளமான மாநகரப் பேருந்து ஊழியர்கள் வாக்களிப்பதற்காக, வேலையில் இருந்து விடுப்பு எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பல்லாவரத்தில் காத்துக் கொண்டிருந்த டி.இம்ரான் என்ற பயணி கூறுகையில், வழக்கமாக ஐயப்பன்தாங்கலுக்கு ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு பேருந்து வரும்.

ஆனால் இன்று ஒரு பேருந்திற்காக 25 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பயணிகள் ஆட்டோக்கள், கேப்கள், புறநகர் ரயில்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதேசமயம் ஏராளமான கேப் டிரைவர்கள் விடுப்பில் சென்றுவிட்டதால், கேப் வசதியிலும் தட்டுப்பாடு இருந்துள்ளது. குறிப்பாக தென் சென்னை பகுதியில் காலை 10 மணி வரை, போக்குவரத்து வசதிகள் மிக மோசமாக இருந்துள்ளன. ஆட்டோ டிரைவர் இருமடங்கு கட்டணம் தருமாறு பயணிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி