ஆப்நகரம்

அழகான வேட்பாளா்: உதயநிதியின் பிரசாரத்தைக் கேட்டு வெட்கப்பட்ட தமிழச்சி

அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறிவிடாதீா்கள் என்று திமுக தென்சென்னை தொகுதி வேட்பாளா் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டாா்.

Samayam Tamil 20 Mar 2019, 5:33 pm
அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறிவிடாதீா்கள் என்று திமுக தென்சென்னை தொகுதி வேட்பாளா் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டாா்.
Samayam Tamil Tamilachi Udhayanidhi


வருகின்ற மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழிக்கும், தென்சென்னை தொகுதியில் போட்டியிட கவிஞரும், எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சைதாபேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பேசிய அவா், தென்சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீா்கள்.

நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டும் கிடையாது. அழகுத் தமிழ், தமிழ் மீது அவா் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் தான் சொல்கிறேன் என்றாா்.

இதனிடையே உதயநிதியின் பேச்சைக் கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், வெட்கத்தில் சிரித்துக் கொண்டே கீழே குனிந்துகொண்டாா். இது தொடா்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி