ஆப்நகரம்

நான் பட்டதாரி இல்லைங்க; இன்னும் படிச்சு முடிக்காத ஸ்மிருதி இரானி!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பை முழுமையாக படித்து முடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 10:36 pm
கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற போது, ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் பிளஸ் டூ மட்டுமே படித்தவர்.
Samayam Tamil Smriti Irani


அவரைப் போய் கல்வி அமைச்சராக நியமிக்கலாமா? என்று சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு தனது செயல்பாடுகளைப் பாருங்கள். தகுதியைப் பார்க்காதீர்கள் என்று ஸ்மிருதி இரானி பேசியிருந்தார்.

முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்ய வேட்புமனுவில், தான் பிகாம் முதல் பாகம் படித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு முந்தைய தேர்தல்களில் பிஏ பட்டப்படிப்பு முடித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால் சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து ஸ்மிருதி இரானியின் கல்வி சான்றிதழ்கள் சிலவற்றை பத்திரிகை ஒன்று வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை கசிய விட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமேதி தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவர் ராகுல் காந்தியை எதிர்த்து களம் காண்கிறார். இதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் தான் பிகாம் முதல் பாகம் மட்டுமே படித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் இன்னும் பட்டப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்று தெரிகிறது.

அடுத்த செய்தி