ஆப்நகரம்

எந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் தான் விழுகிறது – திருமாவளவன்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளாா்.

Samayam Tamil 18 Apr 2019, 3:53 pm
வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் பதிவாவதாகவும், பல பகுதிகளில் இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாக திருமாவளவன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Thirumavalavan


தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தோ்தலும் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் இயந்திர பழுது காரணமாக வாக்குப்பதிவுகள் அவ்வபோது தடை படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் அரியலூா் மாவட்டத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

வாக்கை பதிவு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், வக்குப்பதிவின் போது எந்த பொத்தான்களை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் பதிவாவதாக தகவல்கள் வருகின்றன. இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் இதன் மீது தோ்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பல்வேறு பகுதிகளில் பழுதாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி