ஆப்நகரம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு லட்சம் பானை: திருமாவளவன் முடிவு!

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு லட்சம் பானைகளை பயன்படுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2019, 11:43 am
மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு லட்சம் பானைகளை பயன்படுத்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil pots


வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. விழுப்புரம் தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து பானை சின்னத்தை பிரபலப்படுத்த திருமாவளவன் முடிவு செய்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில், சிதம்பரத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பானைகளை எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு லட்சம் பானைகள வரை பயன்படுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், எங்களது கலை இலக்கியப் பேரவை மூலம் தெருக்கூத்து, நாடகம், கிராமியப் பாடல்கள் என்று நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கிராமந்தோறும் நாங்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். பயிற்சி பெற்ற 1000 கலைஞர்களுடன் சிதம்பரம் தொகுதியில் ஒரு லட்சம் பானைகளுடன் பிரச்சாரத்தை தொடங்குவோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி