ஆப்நகரம்

பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் துரைமுருகன் மகன் மீது வழக்கு

வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் துரைமுருகன் மகன் கதிா் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Apr 2019, 2:29 pm
வேலூா் மாவட்டத்தில் வருமான வரித்துறையினரால் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்த் உள்பட 3 போ் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Samayam Tamil Kathir Anand


கடந்த மாா்ச் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் திமுக பொருளாா் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிா் ஆனந்தால் நிா்வகிக்கப்படும் பள்ளி, கல்லூாி ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாாிகள் சோதனை மேற்கொண்டனா். மேலும் துரைமுருகனுக்கு நெருக்கமான சீனிவாசன் உள்ளிட்டோருக்கு சொந்தமான பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்த சோதனையில் 11.63 கோடிக் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாாிகள் தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். மேலும் மாவட்ட காவல் அதிகாாியிடமும் வருமான வரித்துறை அதிகாாிகள் புகாா் அளித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடா்பாக வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையில் அடிப்படையில் திமுக வேட்பாளரும், துரைமுருகனின் மகனுமான கதிா் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாகு தொிவித்துள்ளாா்.

தவறான பிறமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ததாக கதிா் ஆனந்த் மீதும், லஞ்சம் கொடுக்க முயல்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தாமோதரன், சீனிவாசன் ஆகியோா் மீதும் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி