ஆப்நகரம்

Visu: என்னாலேயே அவரை சந்திக்க முடியவில்லை: தமிழிசைக்காக பிரச்சாரம் செய்ய மறுத்த விசு!

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தாலும், தமிழிசைக்கு மட்டும் நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான விசு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2019, 6:03 pm
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தாலும், தமிழிசைக்கு மட்டும் நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான விசு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai


வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் அறிக்கை எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இதில், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கட்சிக்காக பிரச்சாரம் செய்கின்றனர். அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான விசு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நான் எப்போதும் உண்மை மற்றும் சத்தியம் இரண்டிற்கும் கட்டுப்பட்டவன். அதனால், பாஜக கட்சியில் இணைந்தேன். தற்போது நான் இணைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை கூட பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மட்டும் என்னால் சந்திக்க முடியவில்லை.

இந்த சூழலில் தான் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள பாஜக பிரச்சாரத்திற்கு என்னை அழைத்தார்கள். இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட கட்சியின் உறுப்பினரான என்னாலேயே தமிழிசையை சந்திக்க முடியவில்லை என்றால் மற்றவர்களின் நிலைமை என்ன என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அப்படியிருக்கும் போது அவருக்காக என்னால் எப்படி பிரச்சாரம் செய்ய இயலும். எந்த நம்பிக்கையில், அவரை ஆதரித்து நான் பேசுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜகவை ஆதரித்து பேசினாலும் பேசுவேனே தவிர தமிழிசையை மட்டும் நான் ஆதரித்து பேச மாட்டேன். மோடி மற்றும் பொன் ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி