ஆப்நகரம்

நாடு முழுவதும் தொடங்கியது இறுதிக் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் முடிகிறது தேர்தல் திருவிழா!

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 8 மாநிலங்களில் 59 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

Samayam Tamil 19 May 2019, 7:10 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
Samayam Tamil Voting Queue


இதில் 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகள் அடங்கும். அதாவது பீகார்(8), ஜார்க்கண்ட்(3), மத்தியப் பிரதேசம்(8), பஞ்சாப்(13), மேற்கு வங்கம்(9), சண்டிகர்(1), உத்தரப்பிரதேசம்(13), ஹிமாச்சல் பிரதேசம்(4) ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இத்துடன் தமிழகத்தின் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் கோவாவின் பனாஜி, கர்நாடகாவின் குந்த்கல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி