ஆப்நகரம்

ராஜேந்திர பாலாஜி செய்தது நாகரிகம் அற்ற செயல்- கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்

தமிழகத்தில் நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளின்போது மத்தியிலிருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அவர்கள் தலைமையில் கண்காணிப்பு நடைபெற வேண்டும் என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 16 May 2019, 7:28 pm
தேனி மாவட்டத்திற்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்று இருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்றம் செய்யவேண்டும்.
Samayam Tamil rajendra balaji


தமிழகத்தில் நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளின்போது மத்தியிலிருந்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து அவர்கள் தலைமையில் கண்காணிப்பு நடைபெற வேண்டும் என புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கூறுகையில்:

தமிழகத்தில்பெண்கள் தொடர்பான பாலியல் வழக்குகள் மாணவிகளுக்கு ஏற்படும் கொடுமை ஆகியவற்றில் போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும் மாணவி திலகவதி கொலை வழக்கில் போலீசார் விசாரணை பல்வேறு ஐயத்தை ஏற்படுத்துகிறது எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் மின் தட்டுப்பாட்டால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை மறுத்து இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கூறிய அவர்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழக தேர்தல் அதிகாரி செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவே அவர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு மேற்பார்வையாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்திற்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்று இருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் வாசுகி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் பாலைவனமாக்க காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு மீண்டும் மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குழந்தை விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இத்தகைய செயல்களில் அரசியல் தொடர்பு ஏதாவது உள்ளதா என்பதை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை ஆனால் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டிற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள் பதில் கூறலாமே தவிர அமைச்சர் ஒருவரே தவறான கருத்தை மிரட்டும் தொனியில் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் தொடர்ந்து அவரை இழிவுபடுத்தும் வகையில் அவர் மீது காலனிகள் வீசுவது நாகரிகமற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை சந்தித்திருப்பது இயல்பான ஒன்றுதான் என்றும் தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் ஒருவர் ஒருவரை சந்தித்து அரசியல் குறித்துப் பேசுவது நடைமுறையான விஷயம் என்றும் இதனால் மூன்றாவது அணி அமையும் என்பது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி