ஆப்நகரம்

மோடி மோதி பார்க்கலாமா? - வாரணாசியில் மோடிக்கு சவால்விடும் பீம் ஆர்மி தலைவர்!

வரும் மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட உள்ளதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2019, 3:19 pm
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல்கட்டம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நடக்கவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
Samayam Tamil Modi


இதற்காக கூட்டணி அமைக்கப்பட்டு, பிரச்சாரத்திற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘பீம் ஆர்மி’ என்ற தலித் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் தலைவர் சந்திரசேகர் ஆசாத்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கன்சிராம் சகோதரி ஸ்வர்ண கவுர், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ஆசாத், வரும் மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவேன். எனக்கு பதவி ஆசை இல்லை. அரசியல் சட்டம், தலித் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

மோடியை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுப்பேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி