ஆப்நகரம்

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலை!

ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

Samayam Tamil 23 May 2019, 12:08 pm
ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
Samayam Tamil AP Elections Result


ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டிற்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனால் பெரிய அளவிலான ஆட்சி மாற்றம் எதிர்பார்ப்பு ஆந்திராவில் நிலவியது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சூறாவளி பிரச்சாரம் செய்தது. இதனால், இந்த முறை ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்பு அதிகரத்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்தங்கியுள்ளது. முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 141 இடங்களில் முன்னிலையிலும், தெலுங்கு தேசம் கட்சி 27 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளை ஒப்பிடும் போது தெலுங்கு தேசம் மிகவும் பின்தங்கியுள்ளது. பெரும்பாண்மைக்கு தேவை 88 இடங்கள். ஆகும்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, ஏற்கனவே வெளிவந்த கருத்துக்கணிப்புகளின்படி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. இதனால், இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி