ஆப்நகரம்

கணவர் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி மனைவி

சென்னை: கணவர் இறந்த சோகத்தில் அவருடைய 8 மாத கர்ப்பிணி மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2019, 3:13 pm
சென்னையில் கணவர் உயிரிழந்த துக்கத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்
கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்


காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் இளந்தென்றல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தி பிரவீன் குமார் உயிரிழந்துவிட்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இளந்தென்றல், நேற்று தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்டநேரமாகியும் இளந்தென்றல் கதவை திறக்காததால் அவருடைய மாமனார் சந்தேகமடைந்தார்.

கதவை தட்டியும் உள்ளே இருந்த இளந்தென்றல் திறக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இளந்தென்றல் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

8 மாத கர்ப்பிணியான இளந்தென்றல் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் மீது உயிரையே வைத்திருந்துள்ளார். அவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல், அவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், இளந்தென்றல் உடலை பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி