ஆப்நகரம்

அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ. 50 லட்சம் பணம் பறிமுதல்- வருமான வரித்துறை அதிரடி

திருச்சி அதிமுக நிர்வாகி கல்பனா சேது என்பவர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 11 Apr 2019, 10:12 pm
திருச்சி அதிமுக நிர்வாகி கல்பனா சேது என்பவர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ. 50 லட்சம் பணம் பறிமுதல்
அதிமுக நிர்வாகி வீட்டில் ரூ. 50 லட்சம் பணம் பறிமுதல்


திருச்சி அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் வாயம்பட்டி பஞ்சாயத்து அமைப்பின் தலைவர் கல்பனா சேதுவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அவரது வீட்டுக்கு விரைந்த அதிகாரிகள் கல்பனாவின் வீட்டை முழுமையாக சோதனை செய்தனர். அதில் கணக்கில் வராத பணம் இருப்பதை கண்டறிந்தனர். அதுதொடர்பாக கல்பனாவிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

எனினும், அது தொடர்பாக கல்பனா உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டார். பிறகு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தனிநபர்களிடம் இருந்து ரூ. 37.78 கோடி பணம் வரை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த செவ்வாய் அன்று, திருவண்ணாமலையை சேர்ந்த நாகையா செட்டி என்பவரது வீட்டில் ரூ. 60 லட்சம் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வேலூரில் உள்ள பிரபல மருந்தகத்தின் உரிமையாளர் வீட்டிலிருந்து ரூ. 40 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி