ஆப்நகரம்

வாய்தாவுக்கு வராத நிர்மலா தேவி... நவ. 18 ஆம் தேதி மீண்டும் வாய்தா

நிர்மலாதேவி நீதிமன்றம் வராததால் வழக்கு விசாரணை எதிர் வரும் நவ. 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Oct 2019, 3:03 pm
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்றது தொடர்பான வழக்கில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி இன்று (அக்டோபர் 23ஆம் தேதி ) ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் வழக்கு விசாரணையின் போது நிர்மலாதேவி நீதிமன்றம் வராததால் வழக்கு விசாரணை எதிர் வரும் நவ. 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil nirmala devi case investigation postponed to nov 18
வாய்தாவுக்கு வராத நிர்மலா தேவி... நவ. 18 ஆம் தேதி மீண்டும் வாய்தா


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றத்திற்காக பேராசிர்யை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில காலம் சிறவாசம் அனுபவித்த நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் உடன் ஜாமீனில் வெளி வந்த உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று (அக். 23) ஆஜாரக வேண்டும் என்று நீதிபதி கடந்த வாய்தாவின் போதான விசாரணையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன் நடந்த வாய்தாக்களின் போதும் நிர்மலா தேவி சாமி வந்தது போல நடித்து ஒருமுறையும், மயக்கம் வந்து கீழே விருந்து மறுமுறையும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ நிர்மலா தேவி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இப்படியிருக்க, இன்று கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராயினர். பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராகவில்லை.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, இந்த வழக்கின் விசாரணையை நவ. 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அந்த நாளின் போது (நவ. 18) மூன்று பேரும் தவறாமல் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும், நவ. 18 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை தொடங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் புள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலரின் பெயரும் இந்த விசாரணையின் போது வெளிவரலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி