ஆப்நகரம்

Dr.Jayamohan: திறமையான இளம் மருத்துவரை இழந்தது தமிழகம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

நீலகிரி மாவட்ட மலைப் பகுதியில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,

Samayam Tamil 20 Apr 2020, 8:30 am
நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பழங்குடி இன மக்களுக்கு பெரும் சேவை மனப்பான்மையுடனும் ஈடுபாட்டுடனும் மருத்துவச் சேவையாற்றி வந்த இளம் மருத்துவரின் இறப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dr.jayamohan


கோவை மாவட்டம் சிறுமுகைப் பகுதியைச் சேர்ந்த ஜெயமோகன் என்ற இளைஞர் சென்னையில் மருத்துவம் படித்தவர். தனது மருத்துவப்படிப்பு முடிந்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் இருக்கும் ‘தெங்குமரஹடா’ குக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

தற்போது ஊரடங்கு சமயம் என்பதால், பொதுமக்களுக்காக தானே வீடு வீடாகச் சென்று மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஜெயமோகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறப்பு தெங்குமரஹடா கிராமத்தை மட்டுமன்றி , இவரை அறிந்த தமிழகமெங்கும் இருக்கும் அனைத்து மருத்துவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில் நிலைமை இப்படியா ? நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர்

இவரது இறப்புக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது, "மருத்துவர் ஜெயமோகனின் இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரியில் ஒரு பழங்குடி கிராமத்தில் தனது சேவையை ஈடுபாட்டுடன் ஆற்றிவந்த மருத்துவர் ஜெயமோகனின் இறப்பால் தமிழகம் ஓரு திறமையான இளம் மருத்துவரை இழந்துவிட்டது. அவரது குடும்பம் மன அமைதி பெற நான் பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவித்தார்.


ஆம். திறமையான ஒரு நல்ல இளம் மருத்துவரை தமிழ்நாடு இழந்திருக்கிறது. மருத்துவர்களின் சேவை எப்போதும் தேவையாயிருக்கும் சமூகம் தான் இது என்றாலும், உலகம் முழுக்க இன்று மருத்துவர்களின் மகத்துவம் உணரப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவர் ஜெயமோகனின் இறப்பு ஒரு பேரிழப்புதான்.

அடுத்த செய்தி