ஆப்நகரம்

அதிமுகவினர் பணம் பதுக்கல்: இளங்கோவன் குற்றச்சாட்டு

மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

TNN 10 May 2016, 10:09 am
மதுரை: மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil evks elangovan slams admk hoarding money
அதிமுகவினர் பணம் பதுக்கல்: இளங்கோவன் குற்றச்சாட்டு


ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுகவினர் சுமார் ரூ.5 கோடி வரை பதுக்கி வைத்துள்ளதாக ஈ.வி.கே.எஸ் குற்றம் சாட்டினார். மேலும், 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்டவற்றின் மூலமாக பணப்பட்டுவாடா நடப்பதாக இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற பணபப்ட்டுவாடாவை ராணுவத்தின் உதவியுடன் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி