ஆப்நகரம்

ஆயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?

பிரிட்டனில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 9 May 2017, 12:08 pm
பிரிட்டனில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil facebook deletes thousands of accounts in fight against fake news
ஆயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?


பேஸ்புக் மூலம் வதந்திகள் பரப்புவது சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு பெரும் சவாலான பிரச்னையாக உள்ளது. பொய்யான செய்திகளைப் பரப்பும் பதிவுகளை தானாகவே கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்பத்தையும் அந்நிறுவனம் படிப்படியாக மேம்படுத்தி வருகிறது.

இதனிடையே, பிரிட்டனில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு அந்நாட்டில் உள்ள பேஸ்புக் பயனாளர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க, அந்நாட்டுப் பத்திரிகைகளில் பேஸ்புக் விளம்பரம் வெளியிட்டது.

பொய்யான செய்திகள் குறித்து கவனமாக இருக்க தலைப்புகளை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது நல்லது என்றும் அந்நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பதாக கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டன் பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் திடீரென முடக்கியுள்ளது.

அடுத்த செய்தி