ஆப்நகரம்

கூடிய விரைவில் ஸ்மார்ட் போனை இரண்டாக மடிக்கலாம்..!

ஸ்மார்ட் போன் திரையை இரண்டாக மடிக்கும் தொழில்நுட்பம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 18 Mar 2017, 10:23 am
ஸ்மார்ட் போன் திரையை இரண்டாக மடிக்கும் தொழில்நுட்பம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil folded smart phones will introduced soon says samsung
கூடிய விரைவில் ஸ்மார்ட் போனை இரண்டாக மடிக்கலாம்..!


இன்றைய தொழில்நுட்ப உலகில் எல்லாமே ஸ்மார்ட் போன் தான் என்றாகிவிட்டது. எனவேதான் எந்த புதிய கண்டுபிடிப்புகள் உருவானாலும், முதலில் அவை ஸ்மார்ட் போனில் பரிசோதித்து பார்க்கப்படுகின்றன. இந்த வகையில் வளையும் வகையிலான டிஸ்பிளேவை சாம்சங் நிறுவனம் சோதித்து வருகிறது.

கடந்த பல மாதங்களாக நடந்து வரும் இந்த சோதனை தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்த வளையக்கூடிய டிஸ்பிளேவின் மாதிரி வெளியிடப்படும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை வளையக்கூடிய டிஸ்பிளேக்களுக்கு ஸ்மார்ட் போன் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தால்,வரும் 2018-ஆம் ஆண்டு இந்த திரைகளைக் கொண்டு, வளையக்கூடிய ஸ்மார்ட் போன்களை பெருமளவு உற்பத்தி செய்யவும் சாம்சங் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் ”சாம்சங் கேலக்சி எக்ஸ்” என அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் எல்.ஜி நிறுவனமும்,இதுபோன்ற மடிக்கக்கூடிய 1 லட்சம் டிஸ்பிளேக்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

Folded smart phones will introduced soon, says Samsung

அடுத்த செய்தி