ஆப்நகரம்

பேரு பிச்சை! ஆனால், நிஜத்தில் கோடீஸ்வரன்!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கான பங்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

TNN 29 Apr 2017, 7:10 pm
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கான பங்காக 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil google ceo sundar pichai paid 200 million from alphabet in 2016
பேரு பிச்சை! ஆனால், நிஜத்தில் கோடீஸ்வரன்!


தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக பொறுப்பேற்றார். 2016ஆம் ஆண்டிற்கான ஆண்டு வருமானமாக 6,50,00 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிறுவனத்தில் அவருக்கான பங்குத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற ஓராண்டில் பிக்சல் ஸ்மார்ட் போன், கூகுள் ஹோம், குரோம்காஸ்ட் போன்ற ஹார்டுவேர்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பிக்சல் ஸ்மார்ட் போன்கள் ஆப்பிள் ஐபோனுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

சுந்தர் பிச்சையின் புதுமையான முயற்சிகளால்தான் கூகுள் கடந்த ஆண்டு பெருமளவு லாபம் பார்த்திருக்கிறது. இதனால், கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட பங்குத்தொகையைவிட இருமடங்கு பங்குதொகை அவருக்குக் கிடைத்துள்ளது.

2016ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை பணி நிமித்தமாக மேற்கொண்ட பயணங்களுக்காக மட்டுமே 3,72,000 அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி